search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து கடைகள்"

    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
    • தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பஸ் போக்குவரத்து குறைவான மலை கிராமங்கள் அதிகமாக உள்ளது.
    • ஊசி போடுதல், குளுக்கோஸ் செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

     பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மலை கிராமப் பகுதிகளாக உள்ளது. குறிப்பாக பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் பஸ் போக்குவரத்து குறைவான மலை கிராமங்கள் அதிகமாக உள்ளது.

    அரசு மருத்துவமனைகளும், பேரூராட்சி சில கிராமப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. அதிலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பொது மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் போது அக்கறை எடுத்து மருத்துவம் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் அதிக அளவில் உள்ளது.

    இதை சாக்காக பயன்படுத்திக் கொண்ட போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கையில் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களையும், வயதானவ ர்களையும் பேருந்து வசதி இல்லாததால் அவர்களை முடிந்த அளவிற்கு இருசக்கர வாகனங்களிலும் சிலர் செலவு செய்து ஆட்டோ, கார் மூலமாகவும் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.

    வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் ஒரு மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ வாடகை 300, மருத்துவமனை செலவு 500 என குறைந்தது 800 ரூபாய் செலவு செய்யும் நிலை நீடிக்கிறது.அரசு மருத்துவமனைகளுக்கு செல்லலாம் என்றால் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறு மருத்துவமனைகள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமலும், சரியாக அக்கறை எடுத்து நோயாளிகள் மீது கவனம் செலுத்தாததாலும் பெரும்பாலான பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை பொதுமக்கள் நாடி செல்லும் சூழல் நிலவுகிறது. அங்கும் சிறு உடல் நலம் பாதிக்கப்பட்ட சென்றாலும் குறைந்தது 500 ரூபாய் மருத்துவ கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மேற்கண்ட சிரமங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வீடு தேடி வரும் போலி மருத்துவர்களை நாடுகின்றனர்.

    அவர்கள் போன் செய்தால் வீடு தேடி வந்து ஊசி போட்டுவிட்டு செல்கின்றனர். கட்டணம் 100 அல்லது 200 மட்டுமே வாங்குகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் குக்கிராமம் , மலை கிராமம், சிறு நகரங்கள், ஊராட்சி போன்ற பகுதிகளில் மருத்துவமனைகள் இல்லாமல் இருந்தாலும் கூட தனியார் மருந்தகங்கள் மூலம் சட்டவிரோத மாக மருத்துவமனைகளாக மாறி சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர்.

    இது மிகவும் தவறான செயல். சில மருந்தகங்கள் மருத்துவமனைகளாக மாறி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வது, ஊசி போடுதல், குளுக்கோஸ் செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

    இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அவர்கள் சரியான அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு மருந்தகங்கள் எல்லாம் மருத்துவ மனைகளாக மாறி வருவதை கருத்தில் கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • விழிப்பு–ணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    போதைப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    இந்த நிகழ்ச்சிகளில் உடல்நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள், உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.

    மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், போதைமருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த மையத்தில் மருத்துவர்கள், உளவியல் டாக்டர் உள்ளிட்டவர்களை கொண்டு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இந்தகுழு ஒருங்கிணைத்து செயல்பட்டு, போதைப் பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடதேவையான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. #MedicalsStrike
    சென்னை:

    இந்தியாமுழுவதும் மருந்து கடை வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 8½ லட்சம் மருந்துகடைகள் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. அப்பல்லோ உள்ளிட்ட பெரிய மருந்து கடைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

    காலை 6 மணி முதல் மாலை 6-மணிவரை அனைத்து மருந்து கடைகளையும் மூடி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 6000 மருந்து கடைகள் மூடப்பட்டன.

    தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த மருந்துகளில் பாதி விற்பனை சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்துக்கு மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் சென்னையில் அனைத்து பகுதியிலும் மருந்துகடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    வேலை நிறுத்தம் குறித்து மருந்து வணிகர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் ஆன்லைன் மருந்து விற்பனை சாத்தியமாகும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பொருந்தாது.

    அதற்கான கட்டமைப்பு வசதி இந்தியாவில் கிடையாது. இது தவறான வழி முறையாகும். கார்பரேட் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தும் வகையில் ஆன்லைன் மருந்து வணிகத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

    மருந்து தயாரிப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது தவறு இருந்து கண்டு பிடிக்காவிட்டால் அதனை மொத்த வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மூலம் திரும்ப பெற முடியும்.

    ஆனால் ஆன்லைன் விற்பனையில் ஒருமுறை விற்ற மருந்தை திரும்ப பெற முடியாது. மருந்து கட்டுப்பாடு சட்டங்களை ஆன்லைன் வர்த்தகம் பின்பற்ற முடியாது. இது முற்றிலும் மருந்து கட்டுப்பாடு சட்டத்துக்கு எதிரானது.

    ஆன்லைன் மருந்து விற்பனை அதிகரித்து வருவதால் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆன்லைன் விற்பனையை மத்திய அரசு தடுக்க வேண்டும்.


    இன்றைய ஒரு நாள் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மருந்து கடை வணிகர்கள் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் கே.கே.செல்வன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1027 மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நிர்வாகி சத்திய மூர்த்தி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1984 மருந்து கடைகளும் இன்று மூடப்பட்டது. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீரா திரையரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.  #MedicalsStrike
    ×